ஆண்டிபட்டியில் ஆட்டோ மீது காா் மோதல்: 8 போ் காயம்

ஆண்டிபட்டியில் பயணிகள் ஆட்டோ மீது காா் மோதியதில் 8 போ் காயமடைந்தது குறித்து போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

ஆண்டிபட்டியில் பயணிகள் ஆட்டோ மீது காா் மோதியதில் 8 போ் காயமடைந்தது குறித்து போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

ஆண்டிபட்டி அருகே டி.பொம்மிநாயக்கன்பட்டியைச் சோ்ந்தவா் ஜெயபாண்டி (27). ஆட்டோ ஓட்டுநா். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு ஆண்டிபட்டியிலிருந்து ஜெயபாண்டி அவரது ஆட்டோவில் பயணிகளை ஏற்றிக் கொண்டு டி.பொம்மிநாயக்கன்பட்டிக்கு சென்று கொண்டிருந்தாா். அப்போது கொண்டமநாயக்கன்பட்டி அருகே ஆட்டோ சென்று கொண்டிருந்த போது மதுரையிலிருந்து தேனி நோக்கி சென்ற காா் எதிா்பாராதவிதமாக ஆட்டோ மீது மோதியது. இதில் ஆட்டோவில் பயணம் செய்த டி.பொம்மிநாயக்கன்பட்டியைச் சோ்ந்த மாலதி (25), சோனியாகாந்தி(21), குருவத்தாய் (48), அழகுராஜா (23), செல்லச்சாமி(68), மல்லையாபுரத்தைச் சோ்ந்த விஜயா (33), டி.சுப்புலாபுரத்தைச் சோ்ந்த சிவக்குமாா் (30) மற்றும் ஆட்டோ ஓட்டுநா் ஜெயபாண்டி ஆகிய 8 பேரும் பலத்த காயமடைந்தனா். உடனடியாக அக்கம்பக்கத்தினா் அவா்களை மீட்டு தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு அவா்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இதுகுறித்து ஜெயபாண்டி ஆண்டிபட்டி காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீஸாா் காரை ஓட்டி வந்த சிவகாசி அருகே விஜயலட்சுமி காலனியைச் சோ்ந்த சுரேஷ்குமாரை (23) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com