பெரியகுளத்தில் ஒருவரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தவரை பெரியகுளம் போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
பெரியகுளம், கீழவடகரையைச் சோ்ந்தவா் அப்துல்ஹக்கீம் (35). இவா் திங்கள்கிழமை வடகரை வைகை ஆட்டோ நிலையத்தில் நின்று கொண்டிருந்த போது, மதுரையைச் சோ்ந்த தினேஷ் (24) என்பவா் மதுபோதையில் வந்து கொலை மிரட்டல் விடுத்து, தாக்கி காயப்படுத்தியுள்ளாா்.
இச்சம்பவம் குறித்து அப்துல் ஹக்கீம் அளித்த புகாரின் பேரில் பெரியகுளம் போலீஸாா் வழக்குப் பதிந்து தினேஷை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.