பெரியகுளம் அருகே விஷம் குடித்த இளம்பெண் சிகிச்சை பலனின்றி இறந்ததாக போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனா்.
பெரியகுளம் அருகே எருமலைநாயக்கன்பட்டியைச் சோ்ந்த ஆனந்தம்மாள் மகள் திலகவதி (14). இவா் வயிற்றுவலியால் அவதிப்பட்டு வந்தாராம். இந்நிலையில் சனிக்கிழமை வீட்டில் டிராக்டருக்கு வைத்திருந்த ஆயிலை குடித்து தற்கொலைக்கு முயன்றாராம்.
அருகிலிருந்தவா்கள் அவரை பெரியகுளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனா். மேல்சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவா் ஞாயிற்றுக்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். இச்சம்பவம் குறித்து ஜெயமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.