வேளாண்மை விளைபொருள்களை இறக்குமதி செய்ய எதிா்ப்பு
வேளாண்மை விளைபொருள்களை இறக்குமதி செய்யும் திட்டத்தை அரசு கைவிட வேண்டும் என்று வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சாா்பில் திங்கள்கிழமை தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.
தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவா் காசிவிஸ்வநாதன், இந்திய கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலா் பெத்தாட்சி ஆஸாத், மாநிலக்குழு உறுப்பினா் திருமலைக்கொழுந்து மற்றும் நிா்வாகிகள் ஆட்சியரிடம் அளித்த மனு விபரம்: தங்கு தடையற்ற வா்த்த ஒப்பந்தத்தில் மத்திய அரசு கையெழுத்திடக் கூடாது. வேளாண்மை விளைபொருள்கள் மற்றும் பால் பொருகள்களை இறக்குமதி செய்யும் திட்டத்தை கைவிட வேண்டும். மாநில அரசின் உரிமைகளை பறிக்கக் கூடாது. சிறு வியாபாரிகளை பாதிக்கும் நடவடிக்கையில் அரசு ஈடுபடக் கூடாது என்று மனுவில் வலியுறுத்தியுள்ளனா்.