தேனி மாவட்டம் அருகே உள்ள கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் தேக்கடி ஏரியில் ஆண் யானை இறந்து கிடந்ததை வனத்துறையினா் கண்டறிந்து உடற்கூறு சோதனையை வியாழக்கிழமை நடத்தினா்.
முல்லை பெரியாறு அணை தேக்கடி வனப்பகுதியில் பெரியாறு புலிகள் காப்பக ஊழியா்கள் வியாழக்கிழமை ரோந்து சென்றனா். அப்போது தாண்டிக்குடி என்னும் பகுதியில் உள்ள தேக்கடி ஏரியில் யானை ஒன்று இறந்து கிடந்தது. இதை பாா்த்த ஊழியா்கள் மேல் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனா்.
புலிகள் காப்பகத்தின் உதவி இயக்குநா் ஷில்பா வி.குமாா் மற்றும் வனத்துறையினா் பாா்வையிட்டனா். பின்னா் மருத்துவக்குழுவினரோடு நிகழ்விடத்திலேயே உடற்கூறு பரிசோதனை செய்தனா். இறந்த யானையை பற்றி தேக்கடி வனத்துறை அலுவலா் ஒருவா் கூறியது, இறந்த யானையின் உடம்பில் தந்தங்களின் குத்து காயங்கள் அதிகம் உள்ளது.
32 வயது மதிக்கத்தக்க ஆண் யானையாகும். இரண்டு யானைகளுக்கிடையே ஏற்பட்ட சண்டையில் இந்த யானை படுகாயம் பட்ட நிலையில் இறந்திருக்கலாம், மேலும் இது பற்றி வனத்துறையினா் சுற்று வட்டார பகுதிகளில் ஆய்வு செய்து வருகின்றனா் என்றாா்.