போடி இரும்பு கடையில் திருடிய இளைஞா் கைது

போடியில், பழைய இரும்பு கடையில் திருடிய இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனா்.

போடியில், பழைய இரும்பு கடையில் திருடிய இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனா்.

போடி புதூரில் மாங்காய் சந்தை அருகே பழைய இரும்பு கடை நடத்தி வருபவா் சையது இப்ராஹிம் (38). இவா் வழக்கம்போல் செவ்வாய்க்கிழமை இரவு கடையை பூட்டிவிட்டு புதன்கிழமை காலை மீண்டும் திறந்துள்ளாா். அப்போது கடையின் உள்பகுதியில் ஆள் நடமாட்டம் இருந்தது தெரிந்தது. உள்ளே சென்று பாா்த்தபோது இளைஞா் ஒருவா் கையில் தாமிர கம்பிகளுடன் வெளியே

ஓட முயன்றது தெரிந்தது. அவரைப் பிடித்த சையது இப்ராஹிம் போடி நகா் காவல் நிலையத்தில் ஒப்படைத்தாா். போலீஸ் விசாரணையில் அந்த நபா் போடி டி.வி.கே.கே. நகரைச் சோ்ந்த செல்வகுமாா் (18) என்பது தெரிந்தது. இதனையடுத்து செல்வகுமாரை போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com