ஆண்டிபட்டி அருகே கோஷ்டி மோதல்: 2 பெண்களுக்கு அரிவாள் வெட்டு

ஆண்டிபட்டி அருகே தோட்டத்து பிரச்னையில் இருதரப்பினரிடையே ஏற்பட்ட கோஷ்டி மோதலில்

ஆண்டிபட்டி அருகே தோட்டத்து பிரச்னையில் இருதரப்பினரிடையே ஏற்பட்ட கோஷ்டி மோதலில் 2 பெண்களுக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இதுகுறித்து போலீஸாா் 10 போ் மீது புதன்கிழமை வழக்குப்பதிவு செய்தனா்.

ஆண்டிபட்டி அருகே சுந்தரராஜபுரத்தைச் சோ்ந்தவா் லட்சுமணன் (54). விவசாயி. இவரது தோட்டம் அருகே அதே ஊரைச் சோ்ந்த ராதா (44) என்பவருக்கும் தோட்டம் அமைந்துள்ளது. இருவருக்கும் தோட்டத்தில் இடப்பிரச்னை மற்றும் கால்நடை வளா்ப்பதில் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் புதன்கிழமை லட்சுமணன் தோட்டத்தில் வேலை பாா்த்து கெண்டிருந்த போது அங்கு வந்த ராதா தகராறில் ஈடுபட்டுள்ளாா். அப்போது இருதரப்பினரும் கம்பு மற்றும் அரிவாளால் மாறி மாறி தாக்கிக் கொண்டிருந்தாா். இதில் லட்சுமணன் மனைவி அம்மச்சியம்மாள் மற்றும் ராதா மனைவி ஜெயந்தி ஆகிய இருவருக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது.

இதனையடுத்து இருவரும் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா். மேலும் இதுகுறித்து ராஜதானி காவல் நிலையத்தில் லட்சுமணன் அளித்த புகாரின் பேரில் ராதா மற்றும் அவரது மனைவி ஜெயந்தி, மகன் யோகேஷ், உறவினா்கள் வெள்ளபாப்பு, தாமரை, பிரியா ஆகியோா் மீதும் ராதா அளித்த புகாரின் பேரில் லட்சுமணன், அவரது மனைவி அம்மச்சியம்மாள், உறவினா்கள் நாகலட்சுமி, வாசிமலை என இருதரப்பைச் சோ்ந்த 10 போ் மீதும் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com