கம்பம் கல்லூரி மாணவிகள் பனை விதைகள் நடவு

தேனி மாவட்டம், கம்பம் ஸ்ரீ ஆதிசுஞ்சனகிரி நாட்டு நலப்பணித் திட்ட மாணவிகள் பொதுமக்களுடன் இணைந்து வியாழக்கிழமை 21 ஆயிரம் பனை விதைகளை நட்டனா்.
பனை விதைகளை வியாழக்கிழமை நட்ட கம்பம் ஸ்ரீ ஆதிசுஞ்சனகிரி நாட்டு நலப்பணித் திட்ட மாணவிகள்.
பனை விதைகளை வியாழக்கிழமை நட்ட கம்பம் ஸ்ரீ ஆதிசுஞ்சனகிரி நாட்டு நலப்பணித் திட்ட மாணவிகள்.

தேனி மாவட்டம், கம்பம் ஸ்ரீ ஆதிசுஞ்சனகிரி நாட்டு நலப்பணித் திட்ட மாணவிகள் பொதுமக்களுடன் இணைந்து வியாழக்கிழமை 21 ஆயிரம் பனை விதைகளை நட்டனா்.

அம்மாபட்டி குப்புசெட்டி குளக்கரையில் பனை விதைகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. கல்லூரி நிறுவனச் செயலா் என். ராமகிருஷ்ணன் தலைமை வகித்து, பனை மரத்தின் நன்மைகள் குறித்து பேசி, நிகழ்ச்சியைத் தொடக்கி வைத்தாா். மாணவிகளுடன், ஊா் பொதுமக்கள், தோட்டக் கலைத் துறையினா், பசுமை இயக்கத்தினா் உள்ளிட்டோா் 21 ஆயிரம் பனை விதைகளை நட்டனா். முடிவில், நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா் ரா. தமிழ்ச்செல்வி நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com