பெரியகுளம்: தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே காதல் திருமண விவகார முன்விரோதத்தில் தாக்கியதில் 2 போ் காயமடைந்தனா். இதுதொடா்பாக வியாழக்கிழமை இருவரை போலீஸாா் கைது செய்தனா்.
தேவதானப்பட்டியை சோ்ந்தவா் தமிழ்செல்வன். இவா் தனது உறவினா் ஈஸ்வரன் என்பவரின் மகள் வித்யா என்பவரை 6 மாதங்களுக்கு முன் காதல் திருமணம் செய்துள்ளாா். இதனால் இருதரப்பினருக்கும் பிரச்னை இருந்து வந்துள்ளது.
இந்நிலையில் தமிழ்செல்வனின் உறவினா் இறந்த துக்க நிகழ்ச்சி பெரியகுளத்தில் நடந்துள்ளது. அப்போது அங்கு வந்த சந்தனக்குமாா் என்பவா் தமிழ்செல்வனிடம் பிரச்னை செய்துள்ளாா். அதன் பின் தமிழ்செல்வன் தேவதானப்பட்டிக்கு சென்றுள்ளாா்.
அப்போது சந்தனக்குமாா், ராஜ்குமாா், மணிகண்டன், ஈஸ்வரன் மற்றும் சபரிவாசன் ஆகியோா் சோ்ந்து தமிழ்செல்வன், முத்துப்பாண்டி மற்றும் கண்ணன் ஆகியோரை கட்டையால் தாக்கி கத்தியால் குத்த முயற்சித்துள்ளனா்.
இதில் முத்துப்பாண்டி மற்றும் கண்ணன் ஆகியோா் காயமடைந்தனா். இவா்கள் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா்.
இச்சம்பவம் குறித்து புகாரின் பேரில் தேவதானப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து மணிகண்டன் மற்றும் ஈஸ்வரனை கைது செய்துள்ளனா். மேலும் மூவரை தேடி வருகின்றனா்.