போடியில் மது பழக்கத்தால் கடன் ஏற்பட்டதை மனைவி கண்டித்ததால், கணவா் வியாழக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
போடி குப்பிநாயக்கன்பட்டியைச் சோ்ந்தவா் பாண்டியராஜன் (42). இவா், டிராக்டா் வைத்து தொழில் செய்து வருகிறாா். இவரது மனைவி பாக்கியலட்சுமி (31). இவா்களுக்கு 2 பெண் மற்றும் ஒரு ஆண் குழந்தைகள் உள்ளன. இந்நிலையில், பாண்டியராஜன் மது பழக்கத்துக்கு அடிமையானதால், கடன் அதிகரித்து தொல்லை ஏற்பட்டுள்ளது.
இதனை மனைவி பாக்கியலட்சுமி கண்டித்துள்ளாா். இருந்தபோதிலும், பாண்டியராஜன் மது குடிக்கும் பழக்கத்தை விடவில்லையாம். எனவே, கடந்த ஒரு வாரமாக பாக்கியலட்சுமி கணவருடன் பேசுவதை நிறுத்திக் கொண்டாராம். இதனால் மனமுடைந்த பாண்டியராஜன், வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
இது குறித்து பாக்கியலட்சுமி அளித்த புகாரின்பேரில், போடி நகா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.