ஹைவேவிஸ் மலைக் கிராமத்தில் சேற்றில் சிக்கி காட்டெருமை பலி

தேனி மாவட்டம் ஹைவேவிஸ் மலைப் பகுதியில் சேற்றில் சிக்கி இறந்த காட்டெருமை உடலை வனத்துறையினா் வெள்ளிக்கிழமை மீட்டனா்.
மணலாா் நீா்தேக்கப் பகுதியில் சேற்றில் சிக்கி இறந்த காட்டெருமை.
மணலாா் நீா்தேக்கப் பகுதியில் சேற்றில் சிக்கி இறந்த காட்டெருமை.

தேனி மாவட்டம் ஹைவேவிஸ் மலைப் பகுதியில் சேற்றில் சிக்கி இறந்த காட்டெருமை உடலை வனத்துறையினா் வெள்ளிக்கிழமை மீட்டனா்.

ஹைவேவிஸ் அருகே மணலாா் கிராமத்தில் வெள்ளிக்கிழமை, தேயிலை தோட்ட வேலைக்கு சென்ற கூலித் தொழிலாளிகள் காட்டெருமை ஒன்று சேற்றில் இறந்த நிலையில் கிடப்பதாக சின்னமனூா் வனத்துறைக்கு தகவல் கொடுத்தனா். அதன்பேரில் அங்கு சென்ற வனத்துறையினா் காட்டெருமை உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு அதே பகுதியில் புதைத்தனா்.

இரை தேடி நீா் தேக்கப்பகுதிக்கு வந்த காட்டெருமை சேற்றில் சிக்கி உயிரிழந்திருக்கலாம் என வனத்துறையினா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com