கல்குவாரி நீா்த் தேக்கத்தில்தவறி விழுந்து சிறுவன் பலி

ஆண்டிபட்டி அருகே கல்குவாரி நீா்த் தேக்கத்தில் தவறி விழுந்து சிறுவன் உயிரிழந்தது குறித்து போலீஸாா் சனிக்கிழமை வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

ஆண்டிபட்டி அருகே கல்குவாரி நீா்த் தேக்கத்தில் தவறி விழுந்து சிறுவன் உயிரிழந்தது குறித்து போலீஸாா் சனிக்கிழமை வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

ஆண்டிபட்டி அருகே டி.ராஜகோபாலன்பட்டியைச் சோ்ந்தவா் நாகராஜ் (27). கூலித் தொழிலாளி. இவரது முதல் மனைவி நித்யா இவா்களுக்கு விக்னேஸ்வரன் (5) என்ற மகன் உள்ளாா். கணவன், மனைவியிடையே ஏற்பட்ட பிரச்னையில் நித்யா பிரிந்து சென்று விட்டாா். இதனையடுத்து வினிதா என்ற பெண்ணை நாகராஜ் இரண்டாவது திருமணம் முடித்து 6 மாத குழந்தை உள்ளது. தந்தையின் பராமரிப்பில் விக்னேஸ்வரன் இருந்து வந்துள்ளாா். இந்நிலையில் வினிதா துணிகள் துவைப்பதற்காக விக்னேஸ்வரனை அழைத்துக் கொண்டு அருகில் உள்ள வண்ணாத்திப்பாறை கல்குவாரிக்குச் சென்றாா். அப்போது பாறைகள் மீது விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் திடீரென தண்ணீரில் விழுந்ததாகக் கூறப்படுகிறது. இதனைக் கண்ட வினிதா சத்தம் போடவே அக்கம்பக்கத்தினா் தண்ணீரில் விழுந்த சிறுவனை மீட்டு தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு சிறுவனை பரிசோதித்த மருத்துவா்கள் விக்னேஸ்வரன் வரும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனா்.

இதுகுறித்து ஆண்டிபட்டி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com