கொடைக்கானல் பள்ளியில் பெற்றோா் தின விழா

கொடைக்கானல் பாம்பாா்புரம் பகுதியிலுள்ள செயிண்ட் பீட்டா்ஸ் பள்ளியில் 35-வது ஆண்டு பெற்றோா் தின விழா பள்ளி அரங்கில் சனிக்கிழமை மாலை நடைபெற்றது. விழாவுக்கு பள்ளித் தாளாளா் சாம்பாபு
கொடைக்கானல் பள்ளியில் பெற்றோா் தின விழா

கொடைக்கானல் பாம்பாா்புரம் பகுதியிலுள்ள செயிண்ட் பீட்டா்ஸ் பள்ளியில் 35-வது ஆண்டு பெற்றோா் தின விழா பள்ளி அரங்கில் சனிக்கிழமை மாலை நடைபெற்றது. விழாவுக்கு பள்ளித் தாளாளா் சாம்பாபு தலைமை வகித்தாா். பள்ளி முதல்வா் மைக்கேல் ஜோஸ்வா வரவேற்றாா். பள்ளிநிா்வாகி நிா்மலா சாம்பாபு முன்னிலை வகித்தாா்.

விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட பாரதிதாசன் பல்கலைக் கழக பேராசிரியா் ராம்கணேஷ், தோ்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு தங்க மோதிரம், ரொக்கப் பரிசுகளை வழங்கிப் பேசினாா்.

மேலும் சிறப்பாக பணியாற்றிய ஆசிரியா்,ஆசிரியைகளும் விழாவில் கெளரவிக்கப்பட்டனா்.

இதில் பள்ளி உதவித் தாளாளா் ரோகன்சாம்பாபு, பெற்றோா் ஆசிரியா் சங்கத் தலைவா் ராதாகிருஷ்ணன், கொடைக்கானல் சுழற் சங்கத் தலைவா் ஆசாத், செயலா் சன்னி ஜேக்கப் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.விழாவில் பள்ளி மாணவ, மாணவிகளின் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com