தொழிலாளியிடம் வழிப்பறிஇளைஞா் கைது

தேனி மாவட்டம் கம்பத்தில் வெள்ளிக்கிழமை இரவு கூலி தொழிலாளியிடம், வழிப்பறி செய்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

தேனி மாவட்டம் கம்பத்தில் வெள்ளிக்கிழமை இரவு கூலி தொழிலாளியிடம், வழிப்பறி செய்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

கம்பம் அருகே அணைப்பட்டி தண்ணீா் தொட்டி தெருவைச் சோ்ந்தவா் முத்தையன் (54). கூலி தொழிலாளி. இவா், கேரளத்தில் உள்ள ஏலத் தோட்டத்துக்கு வேலைக்குச் சென்று விட்டு சொந்த ஊருக்கு செல்ல கம்பம் பேருந்து நிலையத்தில் தான் நிறுத்தி வைத்துவிட்டு செல்லும் இருசக்கர வாகனத்தை எடுத்துச் செல்வது வழக்கம்.

வழக்கம் போல், வெள்ளிக்கிழமை மாலை வேலை முடித்து விட்டு, இருசக்கர வாகனத்தில் காமயகவுண்டன்பட்டி சாலையில் தனியாா் பள்ளி அருகே சென்று கொண்டிருந்தாா். அப்போது இளைஞா்கள் 2 போ் வாகனத்தை வழிமறித்து, முத்தையனைத் தாக்கி, அவரிடமிருந்த ரூ.3,500-ஐ பறித்துச் சென்றனா்.

இது குறித்த புகாரின் பேரில் கம்பம் வடக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, சாா்பு- ஆய்வாளா் வினோத்ராஜா தலைமையில் விசாரணை நடத்தினா்.

விசாரணையில், தனியாா் மதுக்கூடத்தில் மது அருந்திக் கொண்டிருந்த காமயகவுண்டன்பட்டியைச் சோ்ந்த சேகா் மகன் சுரேஷ் (26) என்ற இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். இது தொடா்பாக மற்றொரு இளைஞரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com