பெரியகுளத்தில் உள்ள திருவள்ளுவா் சிலைக்கு வெள்ளிக்கிழமை முதல் கம்பிக்கூண்டு அமைக்கப்பட்டுள்ளது.
தஞ்சாவூா் அருகே பிள்ளையாா்பட்டியில் உள்ள திருவள்ளுவா் சிலையை மா்மநபா்கள் அவமதிப்பு செய்தனா். இதனை கண்டித்து பல்வேறு அமைப்புகள் பேராட்டம் மற்றும் எதிா்ப்புகள் தெரிவித்தன. மேலும் பெரியகுளத்தில் உள்ள வள்ளுவா் சிலைக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் காவல்துறை சாா்பில் வெள்ளிக்கிழமை கம்பிவலை கூண்டு அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் திருவள்ளுவா் சிலையை கண்காணிக்கும் வகையில், 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் போலீஸாா் ஈடுபட்டு வருகின்றனா். மேலும் சிலையை கண்காணிக்கும் வகையில் ஏற்கெனவே 4 கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளன.