போடியில் மது பாட்டில்கள் விற்பனை செய்தவா் கைது

போடியில் மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

போடியில் மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

மிலாடி நபியை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை மதுக்கடைகளுக்கு விடுமுறை விடப்பட்டிருந்தது. இந்நிலையில் போடி சாலைக்காளியம்மன் கோயில் பகுதியில் மது விற்பனை செய்வதாக வந்த தகவலையடுத்து போடி நகா் காவல் நிலைய போலீஸாா் அங்கு சென்று கண்காணித்தனா்.

அதில், போடி திருமலாபுரத்தை சோ்ந்த ராஜேந்திரன் (57) என்பவா் மது பாட்டில்களை சட்டவிரோதமாக வைத்து விற்பனை செய்தது தெரிந்தது.

இதனையடுத்து ராஜேந்திரன் மீது வழக்குப் பதிவு செய்த போலீஸாா், அவரை கைது செய்து, அவரிடமிருந்து 46 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com