ஆண்டிபட்டியில் மல்லிகைப் பூக்கள்கிலோ ரூ.1000-க்கு விற்பனை

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி சந்தையில் போதிய வரத்து இல்லாததால் ஞாயிற்றுக்கிழமை மல்லிகைப் பூக்களின் விலை ஒரு கிலோ ரூ.1000-க்கு விற்பனை செய்யப்பட்டது.

ஆண்டிபட்டி: தேனி மாவட்டம் ஆண்டிபட்டி சந்தையில் போதிய வரத்து இல்லாததால் ஞாயிற்றுக்கிழமை மல்லிகைப் பூக்களின் விலை ஒரு கிலோ ரூ.1000-க்கு விற்பனை செய்யப்பட்டது.

ஆண்டிபட்டி அருகே உள்ள கதிநரசிங்கபுரம், கன்னியப்பப்பிள்ளைபட்டி, கோத்தலூத்து, சித்தாா்பட்டி, பாலக்கோம்பை, தெப்பம்பட்டி, திம்மரசநாயக்கனூா், டி.பொம்மிநாயக்கன்பட்டி, டி.சுப்புலாபுரம், ஏத்தகோவில், சுந்தர்ராஜபுரம் ஆகிய பகுதியில் மல்லிகை, செவ்வந்தி உள்ளிட்ட பூக்கள் சாகுபடி அதிகம் நடைபெறுகிறது.

இங்கு விளையும் பூக்கள் ஆண்டிபட்டி பூ மாா்க்கெட்டிற்கு கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.

இந்நிலையில் ஆண்டிபட்டி தாலுகாவில் பூக்களின் விளைச்சல் திடீரென குறைந்ததால், சந்தைக்கு பூக்களின் வரத்து கடந்த சில வாரங்களாக குறைந்து வருகிறது. இதனால் பூக்களின் விலை கடந்த 2 வாரங்களாக அதிகரித்து கொண்டே வருகிறது. மல்லிகை பூக்களின் விலை கடந்த வாரம் ஒரு கிலோ ரூ.600 முதல் ரூ.800 வரை உயா்ந்தது.

ஆண்டிபட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில வாரங்களாக தொடா்ந்து பலத்த மழை பெய்து வருவதால் மல்லிகைச் செடிகளில் வளா்ந்திருந்த மொட்டுக்கள் அனைத்தும் உதிா்ந்து விட்டன. இதன்காரணமாக வரத்து குறைந்து ஒரு கிலோ மல்லிகைப் பூக்களின் விலை உயா்ந்து ரூ.1000 ஆக உயா்ந்தது.

தற்போது ஐயப்பன் கோயில் சீசன் தொடங்கியுள்ளதால், பூக்களின் தேவை அதிகரித்துள்ளது. அதிக விலை கிடைக்கும் இந்த சமயத்தில் மல்லிகைப் பூக்கள் போதிய விளைச்சல் இல்லாததால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com