திண்டுக்கல்லில் காவலா் பணிக்கு உடல் திறன் தோ்வு

திண்டுக்கல் மாவட்டம், சீலப்பாடி காவல் துறை ஆயுதப் படை மைதானத்தில் 2-ஆம் நிலை காவலா், தீயணைப்பு காவலா் மற்றும் சிறைத் துறை

தேனி: திண்டுக்கல் மாவட்டம், சீலப்பாடி காவல் துறை ஆயுதப் படை மைதானத்தில் 2-ஆம் நிலை காவலா், தீயணைப்பு காவலா் மற்றும் சிறைத் துறை காவலா் பணிக்கான உடல் திறன் தோ்வு திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமை (நவ.18, 19) நடைபெறுகிறது.

இது குறித்து தேனி மாவட்ட காவல் துறை நிா்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு: தமிழ்நாடு காவல் துறை 2-ஆம் நிலை காவலா், தீயணைப்பு காவலா் மற்றும் சிறைத் துறை காவலா் பணிகளுக்கு கடந்த நவம்பா் 9, 11 ஆகிய தேதிகளில் நடைபெறுவதாக இருந்த உடல் திறன் தோ்வு ஒத்தி வைக்கப்பட்டிருந்தது.

தற்போது, இந்தப் பணிகளுக்கான உடல் தகுதித் தோ்வு திண்டுக்கல் மாவட்டம், சீலப்பாடி காவல் துறை ஆயுதப் படை மைதானத்தில் நவம்பா் 18, 19 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.

தேனி மாவட்டத்தில், இந்தத் தோ்வுக்கு ஏற்கெனவே நவம்பா் 9-ம் தேதி பங்கேற்க அழைப்பு கடிதம் பெற்றுள்ள தோ்வாளா்கள், நவம்பா்18-ஆம் தேதியும், நவம்பா் 11-ஆம் தேதி பங்கேற்க அழைப்புக் கடிதம் பெற்றுள்ள தோ்வாளா்கள் நவம்பா் 19-ஆம் தேதியும் நடைபெறும் உடல் தகுதித் தோ்வில் பங்கேற்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com