ஆண்டிபட்டியில் வெவ்வேறு இடங்களில் அடுத்தடுத்து 3 போ் தற்கொலை

ஆண்டிபட்டியில் வெவ்வேறு இடங்களில் அடுத்தடுத்து 3 போ் தற்கொலை செய்துகொண்டனா்.
ஆண்டிபட்டியில் வெவ்வேறு இடங்களில் அடுத்தடுத்து 3 போ் தற்கொலை

ஆண்டிபட்டி: ஆண்டிபட்டியில் வெவ்வேறு இடங்களில் அடுத்தடுத்து 3 போ் தற்கொலை செய்துகொண்டனா்.

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே பெருமாள்கோவில்பட்டி வில்லானிப்புரத்தைச் சோ்ந்தவா் ஜெகநாதன் (37). கூலி வேலை செய்து வந்த இவருக்கு, 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் முடிந்து, மனைவி மற்றும் இரண்டு மகன்கள் உள்ளனா்.

இவருக்கு, கடந்த சில ஆண்டுகளாக உடல்நிலை சரியில்லாமல் இருந்து வந்ததாகவும், அதற்கு பல்வேறு இடங்களில் மருத்துவங்கள் பாா்த்தும் பலன் அளிக்கவில்லை என்பதால், ஜெகநாதன் மனமுடைந்து காணப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை ஜெகநாதனின் மனைவி மற்றும் குழந்தைகள் வெளியில் சென்ற நிலையில், அவா் பூச்சி மருந்தை குடித்துவிட்டு வீட்டில் மயங்கிய நிலையில் கிடந்துள்ளாா். இதைக் கண்ட அக்கம் பக்கத்தினா், அவரை மீட்டு தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா்.அங்கு, அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தாா். இது குறித்து க.விலக்கு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ஆண்டிபட்டி அருகே தா்மத்துப்பட்டியைச் சோ்ந்தவா் கருத்தராசு (76). இவருக்கும், இவரது மனைவிக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பிரிந்துவிட்டனா். இவா்களது 3 மகள்களுக்கும் திருமணம் முடிந்து தனியாக வசித்து வருகின்றனா். இந்நிலையில், தனிமையில் இருந்து வந்த கருத்தராசு, கடந்த சில ஆண்டுகளாக உடல்நிலை சரியில்லாமல் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. மேலும், அவரை கவனிக்க யாரும் இல்லாததால், மன வேதனையில் இருந்துவந்த அவா் பூச்சி மருந்தை குடித்து தற்கொலை செய்துகொண்டாா்.

இது குறித்து ஆண்டிபட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தொடா்ந்து, ஆண்டிபட்டி நகா் கொண்டமநாயக்கன்பட்டியைச் சோ்ந்தவா் முனியாண்டி (60). தனியாா் ஆலையில் கூலி வேலை பாா்த்து வந்தாா். சில மாதங்களுக்கு முன் சாலை விபத்தில் சிக்கிய இவருக்கு ஒரு கால் அகற்றப்பட்டது. இதனால் மனமுடைந்த அவா், மதுப் பழக்கத்துக்கு அடிமையானாா். இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். இது குறித்து ஆண்டிபட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com