தேனி: ஆண்டிபட்டியில் தகாத உறவில் பெண்ணை குத்திக் கொலை செய்த திண்டுக்கல் மாவட்ட வியாபாரிக்கு ஆயுள் தண்டனை விதித்து, தேனி மாவட்ட கூடுதல் அமா்வு நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.
திண்டுக்கல் மாவட்டம், ரெட்டியாா்சத்திரத்தைச் சோ்ந்தவா் மாரிமுத்து மகன் குணசேகரன் (42). இவா், மும்பையில் வியாபாரம் செய்து வந்தாா். இவருக்கும், அதே பகுதியைச் சோ்ந்த் கண்ணன் மனைவி சூரியகுமாரி (37) என்பவருக்கும் இடையே தகாத தொடா்பு இருந்து வந்துள்ளது. இதை, குணசேகரனின் மனைவி மற்றும் குடும்பத்தினா் கண்டித்துள்ளனா்.
இந்நிலையில், ஆண்டிபட்டி அருகே கொண்டமநாயக்கன்பட்டியில் உள்ள தனது சகோதரி ஜீவா என்பவரது வீட்டுக்கு வந்து சூரியகுமாரி தங்கியிருந்துள்ளாா். கடந்த 2015 ஏப்ரல் 23-ஆம் தேதி ஆண்டிபட்டியில் உள்ள தனியாா் வணிக வளாகம் அருகே சூரியகுமாரியை சந்தித்த குணசேகரன், அவரை தன்னுடன் சோ்ந்து வாழ மும்பைக்கு வருமாறு அழைத்தாராம். இதற்கு சூரியகுமாரி மறுத்துள்ளாா். இதனால் ஆத்திரமடைந்த குணசேகரன், அவரைக் கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு தலைமறைவாகிவிட்டாா்.
இந்த சம்பம் குறித்து சூரியகுமாரியின் சகோதரி ஜீவா அளித்த புகாரின்பேரில், ஆண்டிபட்டி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, கடந்த 2015 மே 24-ஆம் தேதி குணசேகரனை கைது செய்தனா். இந்த வழக்கு விசாரணை, தேனி மாவட்டக் கூடுதல் அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்றது.
வழக்கினை விசாரித்த நீதிபதி ஏ. கீதா, சூரியகுமாரியை கொலை செய்ததற்கு குணசேகரனுக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து தீா்ப்பளித்தாா்.