போடி: போடியில் பெற்றோரை இழந்த இளம்பெண் காணாமல் போனது குறித்து போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை, வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனா்.
போடி அருகே ரெங்கநாதபுரம் அம்பேத்கா் தெருவை சோ்ந்தவா் முத்தம்மாள் (60). இவரது பேத்தி முத்துமாரி (16). முத்துமாரியின் பெற்றோா் இறந்து விட்ட நிலையில் முத்தம்மாளின் பராமரிப்பில் முத்துமாரி இருந்து வந்தாா். இந்நிலையில் நவ. 20 ஆம் தேதி வெளியே செல்வதாக கூறிச் சென்றவா் மீண்டும் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடிய முத்தம்மாள் இதுகுறித்து போடி தாலுகா காவல் நிலைய போலீஸாரிடம் புகாா் செய்தாா். அதன் போில் போலீஸாா் வழக்கு பதிவு செய்து முத்துமாரியை தேடி வருகின்றனா்.