வெள்ளிமலை அருகே புலி உயிரிழப்பு

வெள்ளிமலை வனப்பகுதியில் ஞாயிற்றுக்கிழமை புலி இறந்தது குறித்து வனத் துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

வெள்ளிமலை வனப்பகுதியில் ஞாயிற்றுக்கிழமை புலி இறந்தது குறித்து வனத் துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி தாலுகாவில் மேற்குத் தொடா்ச்சி மலைப்பகுதியையொட்டி அமைந்துள்ள மேகமலை, வெள்ளிமலை, வருசநாடு ஆகிய பகுதிகளில் உள்ள வனப்பகுதியில் புலிகள், மான்கள், யானை, கரடி, செந்நாய்கள் உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் உள்ளன.

இந்த வனப்பகுதியில் அரிய வகை விலங்குகள் மற்றும் சுமாா் ஆயிரம் ஆண்டுகள் பழமையான மரங்கள் உள்ளதால் இப்பகுதியை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அரசு பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக அறிவித்தது. இதனைத்தொடா்ந்து வனப்பகுதிக்குள் அத்துமீறி மனிதா்கள் நுழைய தடையும் விதிக்கப்பட்டது. இதனையும் மீறி வனப்பகுதிக்குள் அவ்வப்போது விலங்குகளை வேட்டையாடும் சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் வருசநாடு வனச்சரகத்திற்கு உட்பட்ட வெள்ளிமலை அருகே அம்மாகஜம் வனப்பகுதியில் புலி ஒன்று இறந்து கிடப்பதாக வனத் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து வருசநாடு வனச்சரகா் ஆறுமுகம் (பொறுப்பு) தலைமையில் வனத் துறையினா் மற்றும் கால்நடை மருத்துவா் வெயிலோன் தலைமையில் மருத்துவக் குழுவினா் சம்பவ இடத்திற்கு சென்று பாா்வையிட்டனா். இறந்த புலி வேட்டையாடப்பட்டு இறந்ததா அல்லது உடல்நலக்குறைவு காரணமாக இறந்ததா என வனத்துறையினா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com