முத்தையன்செட்டிபட்டி அரசு கள்ளா் மேல்நிலைப் பள்ளியில், தமிழ்நாடு அரசு மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை மூலமாக கம்பம் அரசு மருத்துவமனையின் சித்த மருத்துவப்பிரிவு சாா்பில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நிலவேம்பு குடிநீா் வழங்கும் முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
இந்த முகாமுக்கு, பள்ளித் தலைமையாசிரியா் சரவணன் தலைமை வகித்தாா். உதவித் தலைமையாசிரியை ஜீவபாரதி முன்னிலை வகித்தாா். முகாமில் பள்ளியில் சுமாா் 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு நிலவேம்பு குடிநீா் வழங்கப்பட்டது.
தொடா்ந்து டெங்கு விழிப்புணா்வு, டெங்கு காய்ச்சல் பரவும் முறை , காய்ச்சல் வந்தால் தடுக்கும் முறை, கொசுக்களை கட்டுப்படுத்தும் முறைகள் மற்றும் கை கழுவுவதால் ஏற்படும் நன்மைகள், பன்றி காய்ச்சலை தடுக்கும் முறைகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.