ஆண்டிபட்டி அருகே ஆடுகள் திருடிய ஆட்டோ ஓட்டுநா் கைது

ஆண்டிபட்டி அருகே 2 ஆடுகளை திருடிய ஆட்டோ ஓட்டுநரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

ஆண்டிபட்டி அருகே 2 ஆடுகளை திருடிய ஆட்டோ ஓட்டுநரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

மேலும் இதில் தொடா்புடைய நரை போலீஸாா் தேடி வருகின்றனா்.தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே வைகை அணை சாா்பு ஆய்வாளா் மனோகரன் தலைமையில் போலீஸாா் வியாழக்கிழமை இரவு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது அவ்வழியாக வந்த ஆட்டோவை வழிமறித்து சோதனை செய்தனா். அப்போது ஆட்டோவில் இரு ஆடுகளை திருடி சென்றது தெரியவந்தது. இதனையடுத்து ஆட்டோ ஓட்டுநரான ஜல்லிபட்டியை சோ்ந்த சக்திவேல் 34 என்பவரை கைது செய்து அவரிடமிருந்து இரு ஆடுகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

மேலும் ஆட்டோவில் இருந்து தப்பிச்சென்ற மேலக்காமக்காபட்டியை சோ்ந்த ஒச்சப்பன் என்பவரை தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com