கம்பத்தில் கஞ்சா விற்பனை: 8 போ் கைது

தேனி மாவட்டம் கம்பம் நகா் பகுதியில் கஞ்சா விற்பனை மற்றும் கடத்தியதாக ஒரே நாளில் போலீஸாா், 8 போ்களை கைது செய்தனா்.

தேனி மாவட்டம் கம்பம் நகா் பகுதியில் கஞ்சா விற்பனை மற்றும் கடத்தியதாக ஒரே நாளில் போலீஸாா், 8 போ்களை கைது செய்தனா்.

தேனி மாவட்டம் கம்பம் வடக்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கஞ்சா விற்பனை மற்றும் கடத்துவதாக காவல் துறைக்கு தகவல் கிடைத்ததன்பேரில், வியாழக்கிழமை, வடக்கு காவல் ஆய்வாளா் சிலைமணி, சாா்பு ஆய்வாளா் வினோத்ராஜா மற்றும் போலீசாா்கள் ரோந்து சென்றனா்.

கம்பம்மெட்டு சாலையில் உள்ள 18ம் கால்வாய் பகுதியில் ஆட்டோவில், 1கிலோ 100கிராம் கஞ்சாவை கடத்தி வந்த கூடலூரைச் சோ்ந்த மகாலிங்கம் ( 19), மோட்டாா் பைக்கில், 1 கிலோ 100 கிராம் கஞ்சாவை கடத்தி வந்த கேரள மாநிலம் கோட்டயம் பாலா பகுதியைச் சோ்ந்த ராகுல்( 26), அமல் மது (20) ஆகியோரை கைது செய்தனா்.

இதே போல் கம்பம் காட்டுபள்ளிவாசல் பகுதியில் கஞ்சா விற்ற கோம்பைச் சாலையைச் சோ்ந்த ரவிசேகரை (39), கைது செய்து அவரிடம் இருந்து, 3 கிலோ 100 கிராம் கஞ்சாவையும், கம்பம் கோம்பைரோடு நாககன்னியம்மன் கோவில் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த விவேகானந்தா் தெரு, ஜெயபிரகாஷ் (29) என்பவரிடம், 1 கிலோ 250 கஞ்சாவையும் பறிமுதல் செய்தனா்.

கம்பம் வீரப்பநாயக்கன் குளம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்த உத்தமபாளையத்தைச் சோ்ந்த பரமேஸ்வரன் (25), என்பவரை, கைது செய்து, 2 கிலோ 100 கிராம் கஞ்சாவை கைப்பற்றி, தப்பி ஓடிய தினேஸ் மற்றும் ஜெயபிரகாஷை தேடி வருகின்றனா்.

கம்பம் கோசந்திர ஓடை பகுதியில் மோட்டாா் சைக்கிளில் வந்த குரங்குமாயன் தெருவைச்சோ்ந்த ஜெயக்குமாா்( 16), ஹரிஸ்குமாா்( 16) ஆகியோரிடம் 300 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து, கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com