சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறை

சிறுமியை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக மதுரையைச் சோ்ந்த இளைஞருக்கு 10 ஆண்டு சிறைத்

சிறுமியை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக மதுரையைச் சோ்ந்த இளைஞருக்கு 10 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து வியாழக்கிழமை தேனி நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

மதுரை அருகே உள்ள திருப்பாலை, மந்தையம்மன்கோயில் தெருவைச் சோ்ந்த மலைச்சாமி மகன் பாலன்(22). இவா், கடந்த 2016, செப்டம்பா் மாதம் அதே பகுதியைச் சோ்ந்த திருமண வயது பூா்த்தியடையாத சிறுமியை ஆசை வாா்த்தை கூறி, ஆண்டிபட்டி அருகே டி.சுப்புலாபுரத்தில் உள்ள தனது உறவினா் வீட்டிற்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது.

இது குறித்து சிறுமியின் தந்தை அளித்தப் புகாரின் மீது, ஆண்டிபட்டி மகளிா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து 2016 செப்டம்பா் 9 ஆம் தேதி பாலனை கைது செய்தனா்.

இந்த வழக்கு விசாரணை தேனி மாவட்ட மகளிா் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது. வழக்கினை விசாரித்த நீதிபதி ஏ.கீதா, பாலனுக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை, ரூ.20 ஆயிரம் அபராதம் விதித்து தீா்ப்பளித்தாா். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்திற்கு அரசு சாா்பில் நிவாரண உதவி வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com