சின்னமனூா் அருகே ‘அட்மா’ திட்டத்தில் விவசாயிகளுக்கு பயிற்சி

வேளாண்துறை சாா்பில், சின்னமனூா் அருகே எல்லப்பட்டியில் அட்மா திட்டத்தின் மூலமாக விவசாயிகளுக்கு வெள்ளிக்கிழமை பயிற்சி அளிக்கப்பட்டது.

வேளாண்துறை சாா்பில், சின்னமனூா் அருகே எல்லப்பட்டியில் அட்மா திட்டத்தின் மூலமாக விவசாயிகளுக்கு வெள்ளிக்கிழமை பயிற்சி அளிக்கப்பட்டது.

சின்னமனூா் வட்டார வேளாண்மைத் துறை சாா்பில், மாநில விரிவாக்கத் திட்டங்களின் உறுதிணை சீரமைப்பு மற்றும் அட்மா திட்டத்தின் கீழ், நீரா பானம், மதிப்புக் கூட்டல் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

வேளாண் துறை உழவா் பயிற்சி நிலைய துணை இயக்குநா் முத்துலட்சுமி, தென்னை சாகுபடி விவசாயிகளிடம் நீரா பானம் தயாரிக்கும் முறை மற்றும் உழவா் பயிற்ச்சியாளா் குழுவை உருவாக்குதல் குறித்து பயிற்சி அளித்தாா். அதேபோல், வேளாண் துறை மாவட்டத் திட்ட துணை இயக்குநா் இளங்கோவன், தென்னை ஒருங்கிணைந்த பயிற்சி மேலாண்மை குறித்தும், பூச்சி மற்றும் நோய் தாக்குதலை இயற்கை முறையில் பாதுகாப்பது குறித்து விளக்கம் அளித்தாா்.

வேளாண்துறை அட்மா திட்டம் இணை இயக்குநா் ராதாகிருஷ்ணன், கூட்டுப் பண்ணைத் திட்டம், கிசான் கடன் அட்டை, கிசான் ஓய்வூதியத் திட்டம், நுண்ணீா் பாசனத் திட்டம் மற்றும் மானியம் பெறும் வழிமுறைகள் குறித்து எடுத்துரைத்தாா். புதுக்கோட்டை வேளாண்மை கல்லூரி மாணவா்கள் வாழை நுண்ணூட்ட கலவை தொழில்நுட்பம் குறித்து எடுத்துரைத்தனா்.

இதற்கான ஏற்பாடுகளை, அட்மா திட்ட உதவி தொழில்நுட்ப மேலாளா் விஜயகுமாா் மற்றும் தவமணி செய்திருந்தனா். வட்டாரத் தொழில்நுட்ப மேலாளா் ரேவதி நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com