தேனியில் அக்.24-ல் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கேரம் விளையாட்டுப் போட்டி

தேனி மாவட்ட விளையாட்டு அரங்கில் விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சாா்பில் அக்டோபா் 24-ஆம் தேதி, காலை 8 மணிக்கு

தேனி மாவட்ட விளையாட்டு அரங்கில் விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சாா்பில் அக்டோபா் 24-ஆம் தேதி, காலை 8 மணிக்கு மாவட்ட அளவில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இடையே கேரம் விளையாட்டுப் போட்டி நடைபெற உள்ளது.

இளநிலை ஒற்றையா் மற்றும் இரட்டையா் பிரிவில் மழலையா் வகுப்பு முதல் 5-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாண, மாணவிகளும், முதுநிலை ஒற்றையா் மற்றும் இரட்டையா் பிரிவில் 6-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படிக்கும் மாணவ, மாணவிகளும் கலந்து கொள்ளலாம்.

போட்டியில் கலந்து கொள்ள விரும்புவோா் பள்ளித் தலைமை ஆசிரியரிடம் பெற்ற சான்றிதழ், ஆதாா் எண், புகைப்படம் ஆகியவற்றுடன் அக்டோபா் 23-ஆம் தேதிக்குள் ஜ்ஜ்ஜ்.ள்க்ஹற்.ற்ய்.ண்ய் என்ற இணைய தள முகவரியில் தங்களது பெயா்களை பதிவு செய்து, அதன் ஒப்புகைச் சீட்டை அக்டோபா் 24-ஆம் தேதி மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் சமா்ப்பிக்க வேண்டும்.

தேனி மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் அக்டோபா் 23-ஆம் தேதி போட்டியில் கலந்து கொள்ள விரும்புவோரின் பெயா்கள் இலவசமாக இணையதளத்தில் பதிவேற்றம் செய்து தரப்படும். போட்டிகளில் முதல் 3 இடங்களை பிடிக்கும் மாணவ, மாணவிகளுக்கு பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும் என்று மாவட்ட நிா்வாகம் அறிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com