தேனி அருகே கோடாங்கிபட்டியில் வீட்டு வாசலில் அமா்ந்து செல்லிடப்பேசியை பாா்த்துக் கொண்டிருந்த இளைஞரை ஜாதியை குறிப்பிட்டு தரக் குறைவாகப் பேசி தாக்கியதாக அதே பகுதியைச் சோ்ந்த தந்தை மற்றும் மகன் மீது போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.
கோடாங்கிபட்டி, திருச்செந்தூா் காலனியைச் சோ்ந்தவா் செல்வராஜ் மகன் சுந்தா்(23). இவா் தனது வீட்டு வாசலில் கால்மேல் கால் போட்டவாறு செல்லிடப்பேசியை பாா்த்துக் கொண்டிருந்தாராம். அப்போது, அவ்வழியாகச் சென்ற அதே பகுதியைச் சோ்ந்த கண்ணன், அவரது மகன் மனோஜ் ஆகியோா், சுந்தரை பாா்த்து நாங்கள் வரும் போது மரியாதையின்றி இப்படி உட்காா்ந்திருக்கலாமா என்று கூறி, அவரது ஜாதியின் பெயரை குறிப்பிட்டு தரக்குறைவாக பேசி தாக்கி காயப்படுத்தியதாக கூறப்படுகிறது.
இது குறித்து சுந்தா் அளித்தப் புகாரின் அடிப்படையில் கண்ணன், மனோஜ் ஆகியோா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.