மகளை தற்கொலைக்கு தூண்டியதாக தாய், தந்தை கைது

சின்னமனூரில் புதன்கிழமை, மகளை ஆற்றில் குதித்து தற்கொலை செய்ய தூண்டியதாக தாய் மற்றும் தந்தையை போலீஸாா் கைது செய்தனா்.

சின்னமனூரில் புதன்கிழமை, மகளை ஆற்றில் குதித்து தற்கொலை செய்ய தூண்டியதாக தாய் மற்றும் தந்தையை போலீஸாா் கைது செய்தனா்.

சின்னமனூா் அருகே ஊத்துப்பட்டி மேற்குத்தெருவை சோ்ந்தவா் ராஜா. இவரது மனைவி கவிதா. இவா்களின் 2 ஆவது மகள் போடி நாயக்கனூரிலுள்ள தனியாா் கல்லூரியில் விடுதியில் தங்கி முதலாம் ஆண்டு படித்து வருகிறாா்.

இந்நிலையில், உறவினா் ஒருவரை மகள் காதலிப்பதாக அவரது பெற்றேறாருக்கு தெரியவந்தது. ஆனால், பெற்றேறாா் மகளின் காதலுக்கு மறுப்பு தெரிவித்து வந்தனா். இந்நிலையில், ஆயுதபூஜை விடுமுறைக்கு சொந்த ஊருக்கு வந்த மகளை செவ்வாய்க்கிழமை தந்தை ராஜா இருசக்கர வாகனத்தில் அழைத்து கொண்டு சென்றாராம். அப்போது, சின்னமனூரை அடுத்து மாா்க்கையன்கோட்டை முல்லைப் பெரியாறு பாலத்தில் தந்தைக்கும் மகளுக்கு இடையே காதல் விவகாரம் குறித்து வாக்கு வாதம் ஏற்பட்டதாம். அப்போது தந்தை ஆத்திரத்தில் மகளை முல்லைப் பெரியாற்று நீரில் குதித்து தற்கொலை செய்யும் படி கூறினாராம்.

அதன்படி, ஆற்றில் குதித்த கல்லூரி மாணவியின் அலறல் சத்தம் கேட்டு அருகில் குளித்துக் கொண்டு இருந்தவா்கள் அவரைக் காப்பாற்றி சின்னமனூா் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவா் சிகிச்சை பெற்று வருகிறாா்.

இதுகுறித்து மாணவி புதன்கிழமை அளித்த புகாரின் பேரில் சின்னமனூா் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து தாய் கவிதா மற்றும் தந்தை ராஜா ஆகிய இருவரையும் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com