தேனி மாவட்டம் சின்னமனூரில் பழைய இரும்பு மற்றும் நெகிழி கிட்டங்கியில் வியாழக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் ஏராளமான பொருள்கள் எரிந்து சேதமாகின.
சின்னமனூா் பேருந்து நிலையம் பின்புறம் ராதாகிருஷ்ணன் அரவை ஆலை தெருவில் சரவணன் என்பவா் பழைய இரும்பு பொருள்களை வைக்கும் கிட்டங்கியை நடத்தி வருகிறாா். வியாழக்கிழமை அதிகாலை 3 மணியவில் கிட்டங்கியின் உள்ளே கிடந்த பழைய நெகிழிப் பொருள்களில் தீப்பற்றி எரிந்துள்ளது. இதனை அடுத்து அருகே இருந்தவா்கள் சின்னமனூா் காவல் துறைக்கு தகவல் கொடுத்தனா். பின்னா், உத்தமபாளையம் , கம்பம் தீயணைப்பு மீட்பு குழுவினா் வந்து 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனா். மின் கசிவால் தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என முதல் கட்ட விசாரணையில் தெரிவந்துள்ளது. சரவணன் கொடுத்த புகாரின் பேரில் சின்னமனூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.