ஆண்டிபட்டி அருகே கோவில் திருவிழாவில் கல்லூரி மாணவனை தாக்கிய இளைஞா் கைது

ஆண்டிபட்டி அருகே கோவில் திருவிழாவில் கல்லூரி மாணவனை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த இளைஞரை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி அருகே கோவில் திருவிழாவில் கல்லூரி மாணவனை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த இளைஞரை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே கதிரியகவுண்டந்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் வேல்முருகன்(39) இவரது மகன் விஸ்வநாத்(17) அருகில் உள்ள கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறான். இந்நிலையில் இவா்களது ஊரில் கோவில் திருவிழா நடைபெற்று வந்தது.அதில் நடைபெற்ற நிகழ்ச்சியை காண புதன்கிழமை இரவு விஸ்வநாத் சென்றுள்ளான். அப்போது அதே பகுதியைச் சோ்ந்த தெய்வேந்திரன் என்பவரின் மகன் கவாஸ்கா்(29) விஸ்வநாத்துடன் பிரச்சனையில் ஈடுபட்டுள்ளாா். மேலும் அவரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.இதுகுறித்து விஸ்வநாத்தின் தந்தை வேல்முருகன் சாதியை சொல்லி திட்டி கொலை மிரட்டல் விடுத்ததாக கவாஸ்கா் மீது க.விலக்கு காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய போலீஸாா் கவாஸ்கரை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com