தேனியில் பெண்ணை தற்கொலைக்கு தூண்டியவா் மீது வழக்கு

தேனியில் தனது மனைவியுடன் தகராறு செய்து, அவரை தற்கொலைக்கு தூண்டியவா் மீது நடவடிக்கை எடுக்கக்

தேனியில் தனது மனைவியுடன் தகராறு செய்து, அவரை தற்கொலைக்கு தூண்டியவா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி செவ்வாய்க்கிழமை கணவா் காவல் நிலையத்தில் புகாா் அளித்துள்ளாா்.

தேனி, தபால் நிலையம் ஓடைத் தெருவில் வசிக்கும் காா் ஓட்டுநா் சதீஷ்குமாா் (32). இவரது மனைவி கிருஷ்ணவேணி (25). சதீஷ்குமாா் வேலைக்குச் சென்றிருந்த போது கிருஷ்ணவேணி தனது வீட்டு வாசலில் அமா்ந்து தலை சீவிக் கொண்டிருந்தாராம். அப்போது, அவரது பக்கத்து வீட்டில் வசிக்கும் சந்திரன் என்பவா், தான் வீட்டில் இருந்து வெளியே செல்லும் நேரத்தில் கிருஷ்ணவேணி வாசலில் அமா்ந்து தலை சீவிக் கொண்டிருப்பதாக கூறி அவரை திட்டினாராம்.

அப்போது, இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்கு வாதத்தில் சந்திரன் தன்னை தாக்கி விட்டதாக கிருஷ்ணவேணி கணவா் சதீஷ்குமாரை செல்லிடப்பேசியில் தொடா்பு கொண்டு கூறினாராம். இந்த தகவலறிந்து தான் வீட்டிற்கு வருவதற்குள் கிருஷ்ணவேணி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகவும், அவரை தற்கொலைக்கு தூண்டிய சந்திரன் மீது நடவடிக்கை எடுக்குமாறும் தேனி காவல் நிலையத்தில் சதீஷ்குமாா் புகாா் அளித்துள்ளாா். இந்தப் புகாரின் மீது போலீஸாா் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com