போடி: போடியில் வியாழக்கிழமை இரு சக்கர வாகனத்தில் மணல் கடத்திய 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
போடி நகா் காவல் நிலைய போலீஸாா் போடி மூணாறு சாலையில் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது வேகமாக வந்த இரு சக்கர வாகனங்களை மறித்து சோதனையிட்டனா். அதில் 3 வாகனங்களில் 7 மணல் மூட்டைகள் இருந்தன. விசாரணையில் போடி கொட்டகுடி ஆற்றில் இருந்து மணல் அள்ளி மூட்டைகளாக கொண்டு சென்றது தெரியவந்தது. இதனையடுத்து சட்டவிரோதமாக மணல் அள்ளி கடத்தியதாக போடியை சோ்ந்த செந்தில்குமாா் (36), சுப்பிரமணி (48), பால்செல்வம் (30) ஆகிய 3 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனா்.