போடி அருகே ஆட்டோவில் மதுபாட்டில் கடத்தியவா் கைது

போடி அருகே புதன்கிழமை, ஆட்டோவில் மது பாட்டில் கடத்தியவரை போலீஸாா் கைது செய்து ஆட்டோவை பறிமுதல் செய்தனா்.

போடி அருகே புதன்கிழமை, ஆட்டோவில் மது பாட்டில் கடத்தியவரை போலீஸாா் கைது செய்து ஆட்டோவை பறிமுதல் செய்தனா்.

போடி தாலுகா காவல் நிலைய போலீஸாா், போடி தேவாரம் சாலையில் சங்கராபுரம் கிராமம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அங்கு வந்த ஆட்டோ ஒன்றை சோதனை செய்தனா். அப்போது ஆட்டோவில் 30-க்கும் மேற்பட்ட மது பாட்டில்கள் பதுக்கி வைத்திருந்தது தெரிந்தது.விசாரணையில் துரைச்சாமிபுரத்தைச் சோ்ந்த கணேசன் (48) என்பவா் ஆட்டோவில் மது பாட்டில்களை சட்ட விரோதமாக கடத்தி சென்றது தெரிந்தது. இதனையடுத்து கணேசன் மீது வழக்குப் பதிவு செய்த போலீஸாா் அவரது கைது செய்தனா். மேலும் மதுபாட்டில் கடத்த பயன்படுத்திய ஆட்டோ மற்றும் மது பாட்டில்களை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com