தாமரைக்குளம் பகுதி கடைகளில்  நெகிழிப் பைகள் பறிமுதல்

பெரியகுளம் அருகே தாமரைக்குளம் பகுதியில் உள்ள கடைகளில் நெகிழிப் பைகளை, பேரூராட்சிப் பணியாளர்கள் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனர்.

பெரியகுளம் அருகே தாமரைக்குளம் பகுதியில் உள்ள கடைகளில் நெகிழிப் பைகளை, பேரூராட்சிப் பணியாளர்கள் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனர்.
        தாமரைக்குளம் பகுதியில் பேரூராட்சி செயல் அலுவலர் மகேஸ்வரன் தலைமையில், இளநிலை உதவியாளர் அன்புக்கரசி மற்றும் பணியாளர்கள் ஆகியோர் கொண்ட குழுவினர்,  கடைகளில் நெகிழிப் பைகளின் பயன்பாடு குறித்து ஆய்வு செய்தனர். அப்போது, நெகிழிப் பைகள் பயன்படுத்திய கடைகளுக்கு அபராதம் விதித்ததுடன், அவற்றைப் பறிமுதலும் செய்தனர். மேலும், தொடர்ந்து நெகிழிப் பைகள் பயன்படுத்துவது கண்டறியப்பட்டால், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவுறுத்தினர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com