போடியில் தி.மு.க. இளைஞரணி உறுப்பினர் சேர்ப்பு ஆலோசனைக் கூட்டம் வர்த்தகர் சங்க மண்டபத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்துக்கு மாவட்ட பொறுப்பாளரும், சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினருமான என்.ராமகிருஷ்ணன் தலைமை வகித்தார். ஒன்றியச் செயலாளரும், போடி சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினருமான எஸ்.லட்சுமணன், போடி நகரச் செயலாளர் மா.வீ.செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில இளைஞரணி துணை செயலாளர் அசன் முகமது ஜின்னா உறுப்பினர் சேர்ப்பு முகாமை தொடக்கி வைத்துப் பேசினார்.
மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் வழக்குரைஞர் பாஸ்கரன், துணை அமைப்பாளர் ஆஜிப்கான், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் பழனிக்குமார், நகர அமைப்பாளர் நடராஜ், மாநில செயற்குழு உறுப்பினர்கள் குரு இளங்கோ, சங்கர், பொதுக்குழு உறுப்பினர்கள் பரமசிவம், ஜெயராஜ் உள்ளிட்டோர் பங்கேற்று பேசினர்.
கூட்டத்தில் போடி நகர் மற்றும் ஒன்றியப் பகுதிகளிலிருந்து நூற்றுக்கணக்கான இளைஞர்கள் தங்களை உறுப்பினர்களாக இணைத்துக் கொள்ள விண்ணப்பங்களை பெற்று பூர்த்தி செய்து வழங்கினர்.
கூட்டத்தில் அக்கட்சியின் நகர மற்றும் ஒன்றிய நிர்வாகிகள். சார்பு அணி நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.