தமிழ்நாடு ஏஐடியுசி கட்டடத் தொழிலாளர்கள் சங்கம் சார்பில், தேனியில் செவ்வாய்க்கிழமை மத்திய அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
தேனி பங்களாமேடு திடலில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு, மாவட்டச் செயலர் கா. மனோகரன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் ஆலன், பொருளாளர் முருகன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டத் தலைவர் பெத்தாட்சி ஆஸாத், பொதுச் செயலர் ரவிமுருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில், கட்டுமானத் தொழிலாளர்களுக்கு நடைமுறையில் உள்ள சட்டப்பூர்வ உரிமைகளை பறிக்கக் கூடாது. கட்டுமானத் தொழிலாளர்களுக்கு எதிரான புதிய சட்ட திருத்தங்களை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர்.