மது போதையில் பாசனக் கால்வாயில் விழுந்த கூலி தொழிலாளி சடலமாக மீட்பு

தேனி மாவட்டம், உத்தமபாளையம் அருகே மது போதையில் பாசனக் கால்வாயில் விழுந்த கூலி தொழிலாளி செவ்வாய் க்கிழமை சடலமாக மீட்கப்பட்டார்.

தேனி மாவட்டம், உத்தமபாளையம் அருகே மது போதையில் பாசனக் கால்வாயில் விழுந்த கூலி தொழிலாளி செவ்வாய் க்கிழமை சடலமாக மீட்கப்பட்டார்.
      உத்தமபாளையம் அருகே கோகிலாபுரத்தில் அரசு மதுபானக் கடைக்கு திங்கள்கிழமை இரவு மது அருந்த, வேப்பம்பட்டியைச் சேர்ந்த திராட்சை தோட்டத் தொழிலாளர்களான முத்தையா மகன் ஈஸ்வரன் (38) மற்றும்  துரைப்பாண்டி மகன் மோகன்குமார் (35) ஆகிய இருவரும் சென்றுள்ளனர். அப்போது, அவர்கள் இருவரும் இரவு வரை மது குடித்துவிட்டு, இரு சக்கர வாகனத்தில் ஊருக்குத் திரும்பியுள்ளனர். 
     ஆனால், அளவுக்கு அதிகமாக மது குடித்திருந்ததால், இருவரும் தடுமாறி பாசனக் கால்வாய்க்குள் விழுந்துள்ளனர். இதில், மோகன்குமார் கால்வாயிலிருந்து வெளியே வந்து இரு சக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு வீடு திரும்பிவிட்டாராம். 
      ஆனால், அவருடன் சென்ற ஈஸ்வரன் வீடு திரும்பாத நிலையில், செவ்வாய்க்கிழமை அவரதுஉறவினர்கள் மோகன்குமாரிடம் விசாரித்துள்ளனர். அப்போது அவர், கால்வாயில் விழுந்துவிட்டதை கூறியுள்ளார். உடனே, உறவினர்கள் அங்கு சென்று பார்த்தபோது, ஈஸ்வரன் சடலமாகக் கிடந்துள்ளார்.      தகவலின்பேரில், உத்தமபாளையம் போலீஸார் கால்வாயில் விழுந்து இறந்த ஈஸ்வரனின் சடலத்தை  மீட்டு, அரசு மருத்துமவனைக்கு அனுப்பி வைத்தனர்.
      இது குறித்து உத்தமபளையம்  போலீஸார் செவ்வாய்க்கிழமை  வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com