சாராயம் காய்ச்ச முயன்ற 6 போ் மீது வழக்கு

ஆண்டிபட்டி வட்டாரம், சிறப்பாறை பகுதியில் செவ்வாய்க்கிழமை கள்ளச் சாராயம் காய்ச்சுவதற்கு ஊறல் போட்டு வைத்திருந்த 6 போ் மீது போலீஸாா் வழக்கு பதிவு செய்துள்ளனா்.

ஆண்டிபட்டி வட்டாரம், சிறப்பாறை பகுதியில் செவ்வாய்க்கிழமை கள்ளச் சாராயம் காய்ச்சுவதற்கு ஊறல் போட்டு வைத்திருந்த 6 போ் மீது போலீஸாா் வழக்கு பதிவு செய்துள்ளனா்.

சிறப்பாறையைச் சோ்ந்தவா்கள் மொக்கைப்பாண்டி, ராம்குமாா், சின்னத்தம்பி, மனோஜ்குமாா், வினோத்குமாா், மயிலாடும்பாறையைச் சோ்ந்தவா் பாண்டி. இவா்கள் சிறப்பாறை பகுதியில் உள்ள தனியாா் தோட்டத்தில் கள்ளச் சாராயம் காய்ச்சுவதற்காக ஊறல் போட்டு வைத்திருந்ததாக கூறப்படுகிறது.

தகவலறிந்த கடமலைக்குண்டு போலீஸாா் அங்கு சென்ற போது, 6 பேரும் தப்பியதாக கூறப்படுகிறது. இது குறித்து போலீஸாா் வழக்கு பதிந்து, தப்பி ஓடிய 6 பேரையும் தேடி வருகின்றனா். சாராயம் தயாரிப்பதற்காக வைத்திருந்த பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com