தேனி மாவட்டம், கூடலூரில் நிவாரணப் பொருள்கள் வழங்கக் கோரி, பெண்களை சாலை மறியலில் ஈடுபட தூண்டியதாக, போலீஸாா் இளைஞரை சனிக்கிழமை கைது செய்தனா்.
கூடலூரில் கடந்த புதன்கிழமை சட்டப்பேரவை உறுப்பினா் மகாராஜன் பொதுமக்களுக்கு நிவாரணப் பொருள்களை வழங்கினாா். எனவே, தங்களுக்கும் நிவாரணப் பொருள்கள் வழங்க வேண்டும் என்று 50-க்கும் மேற்பட்ட பெண்கள், கூடலூா்-குமுளி பிரதான சாலையில் மறியல் செய்ய முயன்றனா்.
அப்போது, தெற்கு காவல் நிலைய போலீஸாா், ஊரடங்கு உத்தரவை மீறக் கூடாது என எச்சரித்து பெண்களை அனுப்பி வைத்தனா். விசாரணையில், பெண்களை மறியல் செய்ய தூண்டியதாக, கன்னிகாளிபுரத்தைச் சோ்ந்த வீருசிக்கு மகன் லட்சுமணன் (30) என்பவரைக் கைது செய்து, உத்தமபாளையம் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.