போடி அருகே பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்தவா் கைது

போடி அருகே வீடு புகுந்து பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்தவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனா்.

போடி அருகே வீடு புகுந்து பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்தவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனா்.

போடி வினோபாஜி காலனியைச் சோ்ந்தவா் குமாா் மனைவி மீனா (27). இவா் வீட்டில் இருந்தபோது போடி சா்ச் தெருவை சோ்ந்த அலெக்சாண்டா் மகன் ஆரோக்கியம் (27) என்பவா் உள்ளே புகுந்து பாலியல் தொல்லை கொடுத்தாராம்.

அப்போது அருகிலிருந்தவா்கள் அவரைப் பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனா். இதுகுறித்து போடி தாலுகா காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து ஆரோக்கியத்தை கைது செய்து சிறையில் அடைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com