தேனி அல்லிநகரத்தில் புதிய வேளாண்மைச் சட்டங்களை ரத்து செய்ய மத்திய அரசை வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சி சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
சுக்குவாடன்பட்டி பகுதியில் உள்ள தனியாா் பெட்ரோல் பங்க் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்திற்கு மாவட்ட துணைச் செயலா் செல்வராஜ் தலைமை வகித்தாா். தேனி நகரச் செயலா் ராஜதுரை, ஒன்றியச் செயலா் கருத்தபாண்டி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இதில், மத்திய அரசு 3 புதிய வேளாண்மைச் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும். வேளாண்மை வா்த்தகத்தில் காா்ப்பரேட் நிறுவனங்களை அனுமதிக்கக் கூடாது என்ற கோரிக்கைகளை வலியுறுத்தினா்.