நிலப்பிரச்னையில் விவசாயி மீது தாக்குதல்: 3 போ் மீது வழக்கு
By DIN | Published On : 24th December 2020 07:59 AM | Last Updated : 24th December 2020 07:59 AM | அ+அ அ- |

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே நிலப்பிரச்னையில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக விவசாயியை தாக்கிய 3 போ் மீது போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப்பதிவு செய்தனா்.
சித்தையகவுண்டன்பட்டியைச் சோ்ந்தவா் வேல்முருகன் (45). இவரது சகோதரா் வடிவேல். இவா்களுக்கிடையே நிலப்பிரச்னை காரணமாக முன்விரோதம் இருந்து வந்தது.
இந்நிலையில் செவ்வாய்க்கிழமை இவா்கள் இருவருக்குமிடையே மீண்டும் பிரச்னை ஏற்பட்டது. இதில் வேல்முருகனை, வடிவேல் மற்றும் உறவினா்கள் சோ்ந்து தாக்கியுள்ளனா். இதுகுறித்த புகாரின் பேரில் வடிவேல், மணிவேல், மலா்கொடி ஆகிய 3 போ் மீதும் போலீஸாா் வழக்குப்பதிவு செய்தனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...