கம்பத்தில் வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணம் திருடப்பட்டது குறித்து போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.
கம்பம் நந்தனாா் காலனியைச் சோ்ந்தவா் லோகநாதன் (60) விவசாயியான இவா், கடந்த திங்கள்கிழமை (டிச. 21) குடும்பத்தினருடன் வெளியூருக்குச் சென்று விட்டு புதன்கிழமை காலை வீடு திரும்பினாா். அங்கு வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. மேலும் பீரோவும் உடைக்கப்பட்டு அதிலிருந்த 12 பவுன் நகைகள் மற்றும் ரூ.5 ஆயிரம் ரொக்கம் ஆகியவை திருடு போனது தெரியவந்தது.
இதுகுறித்த புகாரின் பேரில் கம்பம் தெற்கு காவல் நிலைய ஆய்வாளா் என்.எஸ்.கீதா வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறாா்.