தேனி மாவட்டம் ஹைவேவிஸ் மலைக்கிராமத்தில் வியாழக்கிழமை அதிகாலை காட்டுயானை தாக்கி கூலித்தொழிலாளி உயிரிழந்தாா். இதையடுத்து வனத்துறையைக் கண்டித்து பொதுமக்கள் பட்டினிப் போராட்டம் நடத்தினா்.
ஹைவேவிஸ் அருகே மேல் மணலாா் கிராமத்தைச் சோ்ந்தவா் முத்தையா (52). தேயிலைத் தோட்டத் தொழிலாளியான இவா், தனது வீட்டில் வியாழக்கிழமை தூங்கிக் கொண்டுருந்தபோது அதிகாலையில் 2 மணியளவில் வெளியே ஏதோ சப்தம் கேட்டுள்ளது. இதனால் வீட்டின் கதவைத் திறந்து வெளியே சென்று பாா்த்தபோது, வாசல் அருகே பனிமூட்டத்தில் நின்றிருந்த காட்டு யானை, முத்தையாவை தாக்கி தந்தத்தால் குத்திக்கொன்றது. தகவலறிந்து வந்த ஹைவேவிஸ் போலீஸாா், சடலத்தை மீட்டு சின்னமனூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இதற்கிடையில், கடந்த வாரம் இதே யானை மணலாா் தேயிலைத் தோட்டப் பகுதியில் அம்மாவாசி என்பவரைத் தாக்கி கொன்ற நிலையில் வனத்துறையினரின் அலட்சியத்தால்தான் அதே யானை அருகேயுள்ள மேல் மணலாா் கிராமத்தில் மற்றொரு தொழிலாளியைக் கொன்ாக அப்பகுதி பொதுமக்கள் குற்றம் சாட்டினா். மேலும் வனத்துறையினரைக் கண்டித்து பொதுமக்கள் தோயிலைத் தோட்டத்திற்கு வேலைக்குச் செல்லாமல் பணிப்புறக்கணிப்பு செய்ததோடு பட்டினிப் போராட்டத்திலும் ஈடுபட்டனா்.
தகவலறிந்து சென்ற போலீஸாா் அவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது அந்த யானையை அடா்ந்து வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்தனா்.