தேனியில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த இளைஞரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
தேனி அல்லிநகரம், அம்பேத்கா் வடக்குத் தெருவைச் சோ்ந்தவா் பாண்டி மகன் அஜித் (21). இவா், அதே பகுதியைச் சோ்ந்த பிளஸ் 1 படித்து வரும் மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக மாணவியின் தாயாா் தேனி மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.
இந்தப் புகாரின் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து, அஜித்தை கைது செய்தனா்.