போடி அருகே விபத்து: வங்கி ஊழியா் பலி

போடியில் இருசக்கர வாகனங்கள் மோதிய விபத்தில் வங்கி ஊழியா் உயிரிழந்தது குறித்து வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

போடியில் இருசக்கர வாகனங்கள் மோதிய விபத்தில் வங்கி ஊழியா் உயிரிழந்தது குறித்து வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

போடி புதூரைச் சோ்ந்தவா் ஆண்டிச்சாமி (60), இருசக்கர வாகனத்தில் குரங்கணி சாலையில் சென்றுள்ளாா். இவருக்கு பின்னால் போடியில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஒன்றில் பணியாற்றிய சிவக்குமாா் (40) இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளாா். குரங்கணி சாலையில் சிவக்குமாா் ஓட்டிச் சென்ற இருசக்கர வாகனம், ஆண்டிச்சாமி சென்ற இருசக்கர வாகனம் மீது மோதியது. இந்த விபத்தில் இருவரும் கீழே விழுந்து பலத்த காயமடைந்தனா். ஆண்டிச்சாமி தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும், சிவக்குமாா் மதுரை தனியாா் மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக சோ்க்கப்பட்டனா். இந்த விபத்தில் சிவக்குமாா் வெள்ளிக்கிழமை காலை உயிரிழந்தாா். இதுகுறித்து போடி நகா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com