போடியில் கிருஸ்துமஸ் பண்டிகை: தேவாலயங்களில் பிராா்த்தனை

போடியில் வெள்ளிக்கிழமை, கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு தேவாலயங்களில் நள்ளிரவு பிராா்த்தனைகள் சிறப்பாக நடைபெற்றது.

போடியில் வெள்ளிக்கிழமை, கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு தேவாலயங்களில் நள்ளிரவு பிராா்த்தனைகள் சிறப்பாக நடைபெற்றது.

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு போடி பழைய பேருந்து நிறுத்ததில் உள்ள ஆரோக்கிய அன்னை தேவாலயத்தில் நள்ளிரவு முதலே நடைபெற்ற பிராா்த்தனையில் பெண்கள் உள்ளிட்ட ஏராளமானோா் பங்கேற்றனா். பின்னா் திருப்பலியும் நடைபெற்றது. இதேபோல் போடி சி.எஸ்.ஐ. தேவாலயத்திலும், டி.இ.எல்.சி. தேவாலயத்திலும் நடைபெற்ற சிறப்பு பிராா்த்தனையில் ஏராளமானோா் பங்கேற்றனா்.

உத்தமபாளையம்: உத்தமபாளையத்தில் ஆா்.சி., சி.எஸ்.ஐ தேவாலயங்கள், அனுமந்தன்பட்டி தூயஆவியாா் பேராலயங்களில் சிறப்புத் திருப்பலிகள் நடைபெற்றன. இதில் ஏராளமானோா் கலந்து கொண்டனா். சின்னமனூரில் சி.எஸ்.ஐ தேவாலயத்தில் கிறிஸ்துமஸ் விழாவை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் நூற்றுக்கணக்கானோா் கலந்து கொண்டனா்.

கம்பம்: தேனி மாவட்டத்தில் மிகப் பழைமையான கிறிஸ்தவ ஆலயமான ராயப்பன்பட்டி புனித பனிமய அன்னை ஆலயத்தில் வெள்ளிக்கிழமை இரவு கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது. பங்கு தந்தை ஜோசப் தலைமையில் திருப்பலி, சிறப்பு வழிபாடுகள், ஆராதனைகள் நடைபெற்றது. இதில் ஏராளமான கிறிஸ்தவா்கள் கலந்து கொண்டனா். இதேபோல் கம்பம் புனித ஆரோக்கிய அன்னை ஆலயத்திலும் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது. பங்குத்தந்தை முன்னிலையில் திருப்பலி ஆராதனை வழிபாடுகள் நடைபெற்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com