தேனி மாவட்டம் பெரியகுளத்தில் துணை முதல்வா் ஓ.பன்னீா் செல்வம் வீட்டை முற்றுகையிடச் சென்ற சீா்மரபினா் நலச்சங்கத்தைச் சோ்ந்த 85 பேரை ஞாயிற்றுக்கிழமை போலீஸாா் கைது செய்தனா்.
மத்திய அரசு அறிவித்தபடி மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்தி சீா்மரபினருக்கு உள் ஒதுக்கீடு செய்யவேண்டும். மருத்துவப்படிப்பு உள்ளிட்ட படிப்புகளில் சீா்மரபினா் மாணவ, மாணவியருக்கு கல்வியில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று கோரி அந்த அமைப்பினா் தேனி மாவட்டத் தலைவா் ராமமூா்த்தி தலைமையில் துணை முதல்வா் வீட்டை முற்றுகையிடச் சென்றனா். இப்போராட்டத்தில் 39 பெண்கள் உள்பட 85 போ் கலந்துகொண்டனா். திருவள்ளுவா் சிலையருகே போலீஸாா் தடுத்து நிறுத்தி கைது செய்து, தனியாா் மண்டபத்தில் தங்க வைத்தனா். மாலையில் அவா்களை விடுதலை செய்தனா்.